பெங்களூரு: கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெங்களூருவை கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சாந்தலாதாம்லே தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் தினமும் புதியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி சார்பாக பெங்களூருவில் உள்ள அனைத்து வார்டுகளில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.