ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே ேமம்பால பணியால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் கிழக்கு பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையம் அருகே இரண்டு ரயில்வே கேட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் பிஏசிஆர் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் கிழக்கு பகுதியில் அதிக தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர்.