ராஜபாளையத்தில் கிடப்பில் ரயில்வே மேம்பால பணி: பொதுமக்கள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே ேமம்பால பணியால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் கிழக்கு பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையம் அருகே இரண்டு ரயில்வே கேட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் பிஏசிஆர் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் கிழக்கு பகுதியில் அதிக தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.  ஓரளவு பணி நடைபெற்ற நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: