மேலூர்: மேலூர் அருகே ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கட்லா, அயிரை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. மதுரை மேலூர் அருகில் உள்ள இடையவலசையில் உள்ள பெரிய கண்மாயில் நேற்று ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பரந்து விரிந்த இக்கண்மாயில் முழங்கால் அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.