மீனவர்கள் இடையே தகராறு நாகை ஆஸ்பத்திரியில் கத்தி, அரிவாளால் பயங்கர தாக்குதல்

நாகை: நாகையில் சுனாமி பாதிப்பிற்கு பிறகு ஆரிய நாட்டு தெருவில் வசித்த மீனவர்கள் நாகை நகரில் பல்வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இதில் மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும், ஆரிய நாட்டு தெருவில் வசிப்ருபவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மகாலட்சுமி நகரை சேர்ந்த மீனவர்கள் 5 பேர், நாகை நகர பகுதிக்கு நேற்று மாலை நடந்து சென்றபோது ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் சரமாரி வெட்டினர். படுகாயம் அடைந்த 5 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பார்க்க வந்த மகாலட்சுமி நகர் மீனவர்களை, ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து அரிவாள், கத்தி ஆயுதங்களுடன் வெட்ட முயன்றனர். அவர்கள் சிதறி ஓடியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: