திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் விநியோகிப்பதாக முன்னாள் எம்.பி அழகிரிசாமி தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ்ராவ், அதிமுக சார்பில் மான்ராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் கொடுத்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்ததும் டோக்கனை கொடுத்து பணம், சேலை, வேட்டி, பரிசுப்பொருட்களை பெறலாம் என வாக்காளர்களிடம், அதிமுகவினர் கூறி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.