இந்தூர்: உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை இடம்பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு. இவரது இளைய மகள் சந்திரா நாயுடு (வயது 88), இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த இவர் சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று (ஞாயிறு) மதியம் காலமானார். இந்த தகவலை சந்திராநாயுடுவின் சகோதரியின் மகன் விஜய் நாயுடு உறுதி செய்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சந்திரா நாயுடு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போதெல்லாம் பெண்கள் சல்வார் கமீஸ் அணிந்தபடி கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.