அனைத்து திட்டங்களும் கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்-கெங்கவல்லி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி பேச்சு

கெங்கவல்லி : கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி தம்மம்பட்டி, கெங்கவல்லி, செந்தாரப்பட்டி, தெடாவூர், வீரகனூர் பேரூராட்சி, தலைவாசல் ஒன்றிய பகுதிகளில் ஜீப்பில் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கொண்டையப்பள்ளியில் உள்ள சர்ச்சில் போதகரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

இதனையடுத்து ஆலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது ரேகா பிரியதர்ஷினி பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ₹4 ஆயிரம் கொரோனா நிவாரணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000, காஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் ரத்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்,’ என்றார்.

பிரசாரத்தின் போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், தொகுதி பொறுப்பாளர் கோபால், கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் அகிலன், தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் மணி, பேரூராட்சி செயலாளர்கள் பாலமுருகன், அழகுவேல், வேல், ராஜா, முருகேசன், ஒன்றிய இளைஞரணி பிரகாஷ், மணிமாறன், கார்த்திக், காசி, ஷேக் மொய்தீன், ராமசாமி, குணசேகரன், காமராஜ், லட்சுமணன், சித்தார்த்தன், கூடமலை பொன்தங்கராஜ் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: