தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளேன். அதற்கு தொகுதி மக்கள் நீங்கள் தான் காரணம். இந்த முறையும் நான் போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன். மூலக்கொத்தளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய நவீன குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.