சாத்தூர்: சாத்தூர் வடக்கு ரத வீதியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடுகிறார்கள். இதில் 240 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். மதிப்பு கூட்டு வரியை குறைத்தால் காஸ் சிலிண்டர் குறையும். இதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும்போது தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மோடி கூறுகிறார். அவருக்கு திமுகவின் வரலாறு தெரியாது.