சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பாஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து நடிகை குஷ்பூ தினம் தான் போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகவும், தெரு, தெருவாகவும் நடந்து சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அருகில் பிரசாரம் செய்யவும், வாக்குசேகரிக்க வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.