தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மத்தியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘ராயபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தற்போது குறைந்து உள்ளது. அதற்கு காரணம் தங்கசாலை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப்பாலம், என பல பாலங்கள் அமைக்கப்பட்டது தான். மீனவர் நலனை பொறுத்தவரை, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். காசிமேட்டில் மீன் விற்பனை செய்பவர்கள் மழையிலும், வெயிலிலும் சிரமப்படுவதை தடுக்க சமீபத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் மீன் அங்காடி கட்டி கொடுத்துள்ளேன்.