ரவுடி வெட்டிக்கொலை

பெரம்பூர்: ஓட்டேரி எஸ்.எஸ்.ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மதன் (30), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி விஜி என்ற மனைவியும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். மதன் மீது தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு மற்றும் டிபி சத்திரம், அயனாவரம்  உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை  ஓட்டேரி பாஷ்யம் 3வது தெருவில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 பேர், திடீரென அரிவாளால் மதனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மதன் துடிதுடித்து உயிரிழந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பினர். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் மற்றும் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: