சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று காலை கலைஞர் நகர் தெற்கு பகுதி 131 ‘அ’ வட்டத்துக்கு உட்பட்ட டபுள் டேங் காலனி, சிபிஐ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று, திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் கொரோனா ஊரடங்கு நேரத்தில் உணவுக்காக பரிதவித்தபோது உயிரையும் துச்சமென நினைத்து எங்களை நேரில் சந்தித்து உணவு பொருட்களை வழங்கினீர்கள். சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கினீர்கள். மழை வெள்ள காலங்களில் எங்களோடு இருந்து எங்களுக்கு தேவையானதை செய்துள்ளீர்கள்.