கோவையில் 2 இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக-வினர் 4 பேர் கைது..!!

கோவை: கோவையில் 2 இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவினர் 4 பேர் பிடிபட்டனர். காமராஜபுரத்தில் பறக்கும் படை சோதனையில் ரூபாய் 2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிரதீப்குமார், அரவிந்த் விஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சங்கனூரில் தேர்தல் அலுவலர் முருகேசன் தலைமையிலான பறக்கும் படை ரூபாய் 2.45 லட்சத்தை பறிமுதல் செய்தது.

Related Stories: