தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட என்.எஸ்.கோயில் தெருவில் தொடங்கி வெங்கடாசலம் தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு, ஜி.எம்.பேட்டை, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மக்கள் மத்தியில் ஜெயக்குமார் பேசியதாவது:கடந்த 1991ம் ஆண்டு ராயபுரம் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதா என்னை நிற்க வைத்து வெற்றி பெற செய்ய செய்தார். அதிலிருந்து தொடர்ந்து அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக பணியாற்றி வருகிறேன். தொகுதி மக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கிறேன்.