பட்டுவாடா செய்ய பணம் பதுக்கலா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளரின் வீட்டில் ரெய்டு: சிவகாசி அருகே பரபரப்பு

சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2 தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை தொகுதி மாறி போட்டியிடுவதாலும், ராஜபாளையம் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வசிக்கும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசபெருமாள் வீட்டில் மதுரையை சேர்ந்த 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணிநேரம் சோதனை நடந்தது.

Related Stories: