சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் ரேஷன் கடைகளுக்கு செல்கின்ற சுமையை ஒழிக்கும் வகையில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும்.