டெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. இதுகுறித்த விசாரணை வளையத்தில் அண்ணா பல்கலை., ஊழியர்கள், பதிவாளர் உள்ளிட்ட பலர் சிக்கினர். அத்துடன் கலையரசன் விசாரணை குழு சூரப்பா மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார்.