தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மேற்கு தாம்பரம், மாந்தோப்பு பகுதியில் மறைந்த முன்னாள் தாம்பரம் நகர மன்ற துணை தலைவரும், நகர செயலாளருமான ராதா இல்லத்தில், அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, நகராட்சிக்கு உட்பட்ட 33, 35, 36 ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்த 5 ஆண்டுகளில் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 965 சாலைகள் அமைத்துள்ளேன். 8500 சாலையோர மின்விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியுள்ளேன். தெருவுக்கு இரண்டு சின்டெக்ஸ் தொட்டி என வைத்து தண்ணீர் பஞ்சத்தை போக்கி உள்ளேன். கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றுவேன் என உறுதியளித்து அதற்கான பணியை செய்து உள்ளேன்.