விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: நம்ம கூட புதுப்புது கூட்டணி எல்லாம் வருது. நம்ம கூட்டணி மெகா கூட்டணி. அற்புதமான கூட்டணி. இரட்டை இலை 50 ஆயிரம் ஓட்டில் ஜெயிக்கும் என்றேன். நீங்க 60 ஆயிரம் ஓட்டில் ஜெயிக்க வைப்போம் என்கிறீர்கள். ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. நகரத்தில் 5 கமிட்டியா இருந்தது. இப்போ 12 கமிட்டியா போட சொல்லியிருக்கேன். ஒரு ஆளுக்கு 10 பூத், (சிலரின் பெயரை தெரிவித்து) இவர்கள் பொதுவான பொறுப்பு. 12 கமிட்டி நிர்வாகிகள் தான், 10 பூத் ஓட்டை நீங்க தான் வாங்கி தர்றீங்க. அங்க ராஜா, மந்திரி, சேனாதிபதி எல்லாம் நீங்கதான். பேசி முடிவெடுத்துருவோம். கூட்டணி கட்சி தலைவர்களையும் வைத்துக் கொள்ளுங்கள், மண்டல கமிட்டியும் கண்ட்ரோல பாத்துக்குங்க.