முல்பாகல்: தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தாமல் இருப்பதால், தினமும் சாலையை கடக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை 75ல் வரும் முல்பாகல் தாலுகா, நங்கலி சோதனைச்சாவடி அருகில் தாதிகல்லு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை ேசர்ந்த மணவர்கள் படித்து வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இடை
விடாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருவதால், சாலையை கடந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.