திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரிதா பாபு. அவரை ஆதரித்து கடந்த 30ம் தேதி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அரிதா பாபு வீட்டில் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு சென்று விட்டனர். இந்த நேரத்தில் வீட்டை ஒருவர் வீடியோ எடுத்து நேரலையாக பேஸ்-புக்கில் ஒளிபரப்பி வந்தார். அரிதா பாபு ஏழை அல்ல. அவரது பெரிய வீட்டை பாருங்கள். அவர்களிடம் கார் உள்ளது. தற்போது வேறு இடத்தில் நிறுத்தி உள்ளனர். தேர்தல் லாபத்துக்காக ஏழைகளாக காட்டிக்கொள்கின்றனர். வாக்காளர்கள் இதை நம்ப வேண்டாம் என்று நேரலை வீடியோவில் பேசியுள்ளார். இதை அறிந்த அரிதா பாபுவின் சகோதரர் அருண் உடனே வீட்டுக்கு விரைந்து வந்தார்.