திஸ்பூர்: வங்கதேச அகதிகளை காட்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது என ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் புகார் தெரிவித்துள்ளார். அசாமில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி நிலவரப்படி 27.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக, அசாம் கணபரிஷப் கட்சி ஓர் அணியாகவும், காங்கிரஸ் - அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஓர் அணியாகவும் போட்டியிருக்கின்றன. ஹோஸை தொகுதியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கதேசத்தை சேர்ந்த எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியல் ஆதாயம் பெறவே வங்கதேச அகதிகளை மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர் கூறினார்.