வியாபாரிகளுக்கு உதவி தொகை: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 175வது வட்டத்துக்கு உட்பட்ட இந்திரா நகர், 18வது குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா பேசுகையில், ‘‘சிறு, குறு வியாபாரிகள் அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளக்கூடிய வகையில் அரசின் உதவித் தொகை கிடைக்க வழியை ஏற்படுத்தி தருவேன். தொகுதியின் அடிப்படை தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஓடோடி உழைப்பேன். வேளச்சேரி தலையாய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தி தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.

தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கும் எனக்கு ஒரு வாய்ப்பை தந்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். என்றும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்காக உழைப்பேன்,’’ என்று வாக்குறுதியளித்தார். இதில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையார் துரை, திமுக பகுதி செயலாளர் துரை கபிலன், வட்ட செயலாளர் சந்தானம், மதிமுக பகுதி செயலாளர் செல்வ பாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் அவருடன் சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.

Related Stories: