தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி ேநற்று பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் இ.கருணாநிதி பேசுகையில், “பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக அலுவலகங்கள் அமைத்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து, அந்தக் குறைகள், கோரிக்கைகளை நானே நேரடியாக சென்று ஒரு கவுன்சிலர் போல் பணியாற்றி சரி செய்துள்ளேன்.இதனால் பொதுமக்கள் பயனடைந்தனர்.