கோவை: கூகுள் பே மூலம் அதிமுக பணப்பட்டுவாடா செய்வது குறித்து புகாரளிக்க சென்ற திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக வாகனத்தை சிறைபிடித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி செந்தில் அரசிடம் புகாரளிக்க சென்ற திமுகவினர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.