சென்னை: மதுவை விற்று அரசு வருமானம் ஈட்டுவது சரியா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் மதுரவாயல் நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; எங்களுக்கு ஓட்டு போடுங்கள்; மற்ற கட்சிகளை பிடிக்கும் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள்.