பூந்தமல்லி: மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (60). இவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததை கண்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து சுமார் 9 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 15 வது தெருவில் வசித்து வரும் ரத்தன் ராஜ் (45), கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.