சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் நேற்று காலை தொகுதிக்குட்பட்ட பி.கே.பூங்காவில் நடைபயிற்சி செய்த மக்களிடம், தொகுதியின் பிரச்னை குறித்து பேசினார். அப்போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன், தொகுதிக்கு தேவையான அனைத்தும் செய்வேன், என்றார். பூங்காவில் இருந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம், இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு முகாம், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். முன்பெல்லாம் தொகுதிகளில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தான் இருக்கும். ஆனால், நான் தொகுதி முழுவதும் பல அலுவலகங்கள் அமைக்க உள்ளேன். அங்கு மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்த உடன் தீர்வு காணப்படும்,’ என்றார்.