சென்னை: விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து சூளைப்பள்ளம் பகுதியில் திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை திமுக குழு துணை தலைவருமான கனிமொழி எம்பி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான். குடிநீர், ரேஷன் என போராட்டம் தான். படித்த இளம்பெண்கள், இளைஞர்கள் யாருக்கும் தமிழகத்தில் இன்று வேலை கிடையாது. இதே அதிமுக ஆட்சியில்தான் கோடி கோடியாக செலவு செய்து 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அதில் ஒரு தொழிற்சாலை வந்திருக்கிறதா.