கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார் போட்டியிடுகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவேரிப்பட்டணம் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். அவருடன் இருந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.