திருப்புல்லாணி கோயிலில் சசிகலா திடீர் தரிசனம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சசிகலா நேற்று வந்தார். விடுதியில் தங்கிய அவர் இரவு 7 மணியளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை நடக்கும் ஸ்படிக லிங்க பூஜையில் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்புகிறார். தேர்தலை முன்னிட்டு சசிகலா கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிடுவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: