மாணவர்கள் கல்விக்கு முக்கிய பங்கு: பரந்தாமன் பிரசாரம்

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமனை, விசிக தலைவர் திருமாவளவன், தயாநிதி மாறன் எம்.பி, ஆகியோர் ஆதரித்து பிரசாரம் செய்தனர். இதேபோல் காலை, மாலை நேரங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் மக்களை திமுக வேட்பாளர் பரந்தாமன் சந்தித்து மக்களிடம் குறைகளை கேட்கிறார். தொகுதி பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் உரையாடுகிறார். அவர்கள் கூறும் பிரச்னைகளை கண்டிப்பாக தீர்ப்பதாக உறுதியளித்து வருகிறார். மேலும், வீடு விடாக, தெரு தெருவாக பிரசாரத்துக்கு செல்லும் திமுக வேட்பாளர் பரந்தாமன் மக்களை நேரடியாக சந்தித்து, “திமுக தலைவர் நமது குடும்பங்கள் முன்னேற, நமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

அதெல்லாம், திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும், கண்டிப்பாக உங்கள் வீட்டு பிள்ளை எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். முக்கியமாக குடிசை பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர், “திமுக ஆட்சி வந்ததும் வீடு கட்டிதரப்படும். எழும்பூர் தொகுதியை குடிசையில்லா தொகுதியாக மாற்றுவேன்,” என்று உறுதியாக சொல்கிறார். இதேபோல் வீடுகளில் பிரசாரம் செய்யும்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் தங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாக நம்பிக்கையளித்து வருகிறார். பிரசாரத்துக்கு செல்லும், இடமெல்லாம் மக்கள் திமுக வேட்பாளர் பரந்தாமனை வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை கொடுத்து வருகின்றனர்.

Related Stories: