எம்.கே.பி.நகர் பகுதியில் என்.ஆர்.தனபாலன் பிரசாரம்

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் நேற்று எம்.கே.பி.நகர், மீனாம்பாள் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரையில் அனைத்து வட்டங்களிலும் ஒரே மாதிரியான வரவேற்பை அனைத்து மக்களும் வழங்கி வருகிறீர்கள். குடிசை பகுதியில் செல்லும்போது திருவிழாக்கோலம் போல் மக்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போல் உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வார்கள். மிக அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். பெரம்பூரில் வெற்றி பெற்று இந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன்,” என தெரிவித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: