திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் நேற்று திருவொற்றியூரில் உள்ள மசூதிக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, இஸ்லாமிய நிர்வாகிகள், கடந்த திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்காக பேசின் சாலையில் இடுகாடு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த இடுகாட்டின் சுற்றுச்சுவர் பழுதடைந்துள்ளது. அதை புதுப்பித்து, அதன் அருகில் தமிழ் மற்றும் உருது பள்ளி கட்டித் தரவேண்டும், என்றனர். இதற்கு பதிலளித்து பேசிய கே.பி.சங்கர், ‘சிறுபான்மை மக்களுக்காக கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் கொண்டு வந்தனர்.