போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, நேற்று 179வது வார்டுக்கு உட்பட்ட காந்தி சாலை, திருவள்ளுவர் தெரு, விநாயகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். காந்தி சாலை பகுதியில் பூரண கும்ப மரியாதை அளித்து வேட்பாளரை உற்சாகப்படுத்தினார்கள்.அப்போது அவர் பேசுகையில், ‘என்றென்றும் சமூக சேவகனாக இருந்து வரும் எனக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பை தந்தால், உங்களது பிரச்னைகளை தீர்க்க கடுமையாக உழைப்பேன். எந்நேரமும் பிரச்னைகளை தெரிவிக்கலாம். அவற்றை நிறைவேற்றி தர தயாராக இருக்கிறேன்.

முக்கியமாக, போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். வேளச்சேரி தொகுதியில் மாநகராட்சி, நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களுக்கு பட்டா வழங்கவும், குப்பைகள் தேங்காத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். தொகுதியில் வார்டு ஒன்றுக்கு தரம் உயர்த்தப்பட்ட நவீன பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும்’ என்றார். 179வது வார்டு திமுக வட்ட செயலாளர் மதிவாணன், ஜெயச்சந்திரன், வி.ஜி.மோகன், பொன் சுதாகர், கீதா ரவிச்சந்திரன், முரளி, தேவேந்திரன், எத்திராஜ், ரவிக்குமார், கடப்பா ராஜா, லிங்கேசன், மாறன், வினோத், ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன

Related Stories: