புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், சோழவரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், பூதூர், புதிய எருமைவெட்டிபாளையம், பழைய எருமைவெட்டிபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மலர்தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். கிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மாதவரம் எஸ்.சுதர்சனம் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.