சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் போட்டியடவில்லை. நேற்று முதல் 5 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் அக்கட்சி அறிவித்தது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன். ராஜா ஆகிய இருவரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நேற்று மாலை விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டது.