அம்பத்தூர்: கொரட்டூரில் சிபிசிஐடி போலீஸ் என கூறி 20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், சந்தோஷ் நகர், வாட்டர் கெனால் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(32). இவர் ஆன்லைன் மூலமாக வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகர் தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் உள்பட 3 பேர் அங்கு வந்தனர். பின்னர், அவர்கள் தங்களை சிபிசிஐடி போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர், அவர்கள் மூவரும் அவரிடம், உங்கள் மீது மோசடி புகார் வந்துள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 20 ஆயிரம் பணம் லஞ்சமாக தரவேண்டும் என கேட்டனர். மேலும், அவர்கள் அனைவரும் சேர்த்து, சேகரிடம் இருந்து 20 ஆயிரத்தை பறித்தனர்.