சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சாரதி நகரில் தொடங்கி, முனுசாமி தெரு, புண்ணியகோட்டி தெரு, அம்மா கண்ணம்மா தெரு, மணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வி.எஸ்.முதலி தோட்டத்தெரு, பாரதி பிளாக், கோபால் தெரு, சீதாதெரு, ஆறுமுகம் தெரு, காமராஜ் காலனி, ஆறுமுகம் தெரு, லட்சுமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பகுதியை சேர்ந்த பொதுமக்கள், “நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தான் மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு” என்று கூறி இரண்டு புறாக்களை அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கிய மா.சு, “அந்த புறாக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்.