தாம்பரம்: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று திருநீர்மலை பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து, திருநீர்மலை தேரடி தெரு, மேட்டுத்தெரு, குளக்கரை தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். பின்னர், அவர் பேசியதாவது, ‘‘திருநீர்மலை பகுதியில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்னை இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தேன். எனவே, மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் காஸ் சிலிண்டர்களுக்கு மானியம், தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கொரோனா கால நிவாரணமாக, 4000 ஆகியவற்றை உடனடியாக பெற்றுத் தருவேன்.