அமமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு குக்கர் சின்னம்

சென்னை: அமமுக கூட்டணியில் இடம்ெபற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி, அமமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த கட்சி ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து நெல்லிதோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. இந்த 10 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் அனைவருக்கும் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: