விராலிமலை தொகுதியில் சுடுகாட்டிற்கு சாலை வசதியில்லை என சிறுமி புகார்!: சிறுமியை தவறாக வளர்த்துள்ளதாக தாயாரிடம் விஜயபாஸ்கர் எரிச்சல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை என கூறிய சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. புதுக்கோட்டை விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர், ஒருவாரகாலமாக விராலிமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 3 தினங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயபாஸ்கரிடம் ஒரு சிறுமி தங்கள் பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுமியின் பெற்றோருடன் வாக்குவாதம் செய்யும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தாயாருடன், சிறுமியை தப்பாக வளர்த்துள்ளீர்கள். தப்பாக தயார்படுத்தி மனதில் தப்பான விதையை விதைத்துள்ளீர்கள். நல்லவர் யார் கேட்டவர் யார் என்று தெரிந்து பேச வேண்டும் என்று விஜயபாஸ்கர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் எந்தவொரு சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யாமல், தான் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொகுதிகளிலேயே முழுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: