மக்களின் பிரச்னை, குறைகள் தீர்க்கப்படும் திமுக வேட்பாளர் லட்சுமணன் பேச்சு

நெல்லை :  சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. எனவே என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் தொகுதி மக்களின் பிரச்சனைகள், குறைகள் தீர்த்து வைக்க பாடுபடுவேன் என நெல்லை டவுனில் நடந்த பிரசாரத்தில் வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் பேசினார்.

மதச்சார்பற்ற கூட்டணியில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். நேற்று மாலை திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன், நெல்லையப்பர் கோயில் கீழரத வீதியில் உள்ள ஈசான விநாயகர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை துவக்கினார்.

அப்போது அவர் பேசுகையில், சட்டபை தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் என்னை 2வது முறையாக தேர்வு செய்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. தொகுதி மக்களின் பிரச்னைகள், குறைகளை தீர்க்க உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து 40, 41, 42 ஆகிய வார்டுகளில் உள்ள சத்தியமூர்த்தி தெரு, சொக்கப்பனை முக்கு, தெற்குமவுன்ட் சாலை, கல்லணை தெரு, கரிக்காத்தோப்பு, சொக்கட்டான் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரத்தில் பகுதி செயலாளர்கள் கோபி என்ற நமசிவாயம், ரவீந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையாபாண்டியன், மாவட்ட துணை அமைப்பாளர் வள்ளியம்மாள், கேடிசி பழனிசாமி, வர்த்தகர் அணி எல்ஐசி பேச்சிமுத்து, இளைஞரணி முன்னாள் செயலாளர் சுரேஷ், முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன், ஐடி பிரிவு காசிமணி, காங்., மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், சிறுபான்மை பிரிவு முகம்மது அனஸ்ராஜா மற்றும் தமுமுக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: