தூத்துக்குடி: தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, வேலூர், நெல்லை மற்றும் தருமபுரி பகுதிகளில் சுமார் 3,000 சிறு, குறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றம், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்வு போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்த முடியாத நிலைக்கு தற்போது உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.