காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கூத்தலூர் ஊராட்சியை சேர்ந்தது ஆளவந்தான்பட்டி. இப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் வீடுகளில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அதிமுக மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தி வீட்டில் சோதனை செய்தனர். முடிவில் ஆனந்தி வீட்டில் ரூ.70 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கல்லல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பல லட்சம் வரை ஒரு சிலர் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.