மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக, கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஜி.கே.எம்.காலனியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு, அகரம் சேமராமசாமி தெருவில் உள்ள மகளிர் சுயஉதவி குழு, கோபால்ரெட்டி காலனி பகுதியில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், ஹரிதாஸ் சாலையில் உள்ள கிறிஸ்துவ சபை நிர்வாகிகள், அஞ்சுகம் நகர் முதல் தெருவில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஆதரவு திரட்டினார். பி.கே சேகர்பாபு எம்எல்ஏ, கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன், இளைஞரணி மகேஷ்குமார், வட்ட செயலாளர்கள் பாபு, சவுந்தர், அதிபதி, முத்துவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: