முதல்வர் வருகையின் போது கருப்புக் கொடி காட்டிய எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது..!

மண்மலை: தமிழக முதல்வர் வருகையின் பொழுது கருப்புக் கொடி காட்டிய எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கம் பகுதியில் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்த போது மண்மலை கிராமத்தில் முதல்வர் வருகையின் போது எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் 30க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மண்மலை கிராமத்தைச் சேர்ந்த எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விநாயகம் செங்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: