கரூர்: திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; மக்களை அதிகமாக துன்புறுத்தியவர் தான் கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிடுகிறார். வேலை வாய்ப்பு இல்லாத 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி. மக்களை முட்டாள் என நினைக்கும் அனைவருக்கும் முட்டாள் ஆக்கப்படுவார்கள், இதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்.