நெல்லை, பேட்டை நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த தர்ராஜன். வழக்கறிஞரான இவர், சமகவில் அம்பை சட்டமன்ற தொகுதி துணை செயலாளராக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ‘‘நாளைய எம்எல்ஏ’’ என்ற பட்டத்தோடு உலா வந்து கொண்டிருக்கிறார். நெல்லை தொகுதியில் தொடர்ந்து சீட் கேட்டு வரும் இவருக்கு சமகவில் வாய்ப்பு கிட்டவில்லை. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தனக்கு எப்படியும் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்கிற கனவோடு உலா வந்தார். ஆனால் கட்சி தலைமை அழகேசன் என்பவருக்கு வாய்ப்பு அளித்து விட்டது. இதனால் வெறுத்து போன தர்ராஜன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.