நெல்லை தொகுதியில் போட்டியிடும் ‘நாளைய எம்எல்ஏ’: சுயேச்சை வேட்பாளர் ருசிகரம்

நெல்லை, பேட்டை நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த தர்ராஜன். வழக்கறிஞரான இவர், சமகவில் அம்பை சட்டமன்ற தொகுதி துணை செயலாளராக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ‘‘நாளைய எம்எல்ஏ’’ என்ற பட்டத்தோடு உலா  வந்து கொண்டிருக்கிறார். நெல்லை தொகுதியில் தொடர்ந்து சீட் கேட்டு வரும் இவருக்கு சமகவில் வாய்ப்பு கிட்டவில்லை.  இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தனக்கு எப்படியும் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்கிற கனவோடு உலா வந்தார். ஆனால் கட்சி தலைமை அழகேசன்  என்பவருக்கு வாய்ப்பு அளித்து விட்டது. இதனால் வெறுத்து போன தர்ராஜன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவில் வேட்பாளரின் பட்டப்பெயர் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் ‘‘நாளைய எம்எல்ஏ’’ என குறிப்பிட்டிருந்தார். இதேபோல் வாக்குச்சீட்டில் உங்கள் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் ‘‘நாளைய  எம்எல்ஏ தர்ராஜன்’’ என விண்ணப்பத்தை நிரப்பி அளித்து தேர்தல் அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எம்எல்ஏ பதவி என்பது எனது நீண்டகால கனவு. எங்கள் பகுதியில் என்னை இன்றும் ‘‘நாளைய எம்எல்ஏ’’ என்றுதான் அழைக்கின்றனர். எனவே அதையே விண்ணப்பத்தின் பல்வேறு இடங்களில்  குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.

Related Stories: